மூர்த்தி பெரிதானாலும் கீர்த்தி (மிகவும்) சிறியது. ஆரம்ப கால கம்ப்யூட்டர்களை இப்படித்தான் வர்ணிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய கம்ப்யூட்டர் ஒன்று தனது மணி விழாவை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறது. டிஜிட்டல்60 என்னும் பெயரில் மான்செஸ்டர் நகரம் அதற்கு கோலாகலமாக தயாராகி இருக்கிறது. . இந்த பின்னணியில் அந்த கம்ப்யூட்டரின் அருமை பெருமைகளை கொஞ்சம் பார்ப்போம். குறிப்பிட்ட அந்த கம்ப்யூட்டரின் “கீர்த்தி’ சிறியதே தவிர சரித்திரத்தில் அதன் முக்கியத்துவம் மகத்தானது. கம்ப்யூட்டர் வல்லுனர்கள் மத்தியில் “பேபி’ என்றே செல்லமாக குறிப்பிடப்படும் அந்த … Continue reading
தமிழில் ஆத்திச்சூடியும், ஆங்கி லத்தில் பா பா பிளாக்ஷிப்பும் பிள்ளைகள் மழலை மொழி பேசும் காலத்திலேயே கற்றுக் கொள்ளும் முதல் பாட்டுக்களாக விளங்கு கின்றன. இதில் பா பா பிளாக்ஷிப்பிற்கு மற்றொரு சரித்திர முக்கியத்துவமும் இருக்கிறது. இந்த தகவல் பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். உலகின் பெரும்பாலான நாடுகளில் பிள்ளைகள் மழலையர் வகுப்பில் பாடும் அந்த பாடல்தான் கம்ப்யூட்டர் பாடிய முதல் பாட்டும் கூட! இன்று கம்ப்யூட்டரில் மெட்டு போடுவதும், இசைக்கு மெருகு சேர்க்க கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை … Continue reading
பண்டிகை மற்றும் விசேஷ நாட்களின் போது வாழ்த்து அட்டைகளை இமெயில் மூலமாக அனுப்பி வைக்க உதவக் கூடிய இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. உண்மையில் இன்டெர்நெட் பிரபலமாக தொடங்கிய ஆரம்ப காலம் தொட்டே வாழ்த்து அட்டைகளுக்கான இணையதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. இப்போது வீடியோ யுகம் அல்லவா? அதற்கேற்ப வாழ்த்து சொல்வதும், வீடியோ வடிவில் இருப்பதுதானே பொருத்தமாக இருக்கும். . இந்த தீபாவளிக்கு நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு வீடியோ வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் வசதியை இண்டியாவீடியோ டாட் ஓஆர்ஜி இணையதளம் … Continue reading
யாரையாவது பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயிக்கு என்று சொல்வது வசைச் சொல்லாக தான் அமையும். பொறுப்பானவர்கள் தங்கள் மிகுந்த அக்கறை கொண்டவர்களின் நிகழ்கால போக்கு குறித்த வேதனை மற்றும் விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக இப்படி வசைப்பாடுவதாக புரிந்து கொள்ளலாம். . பெரும்பாலும் தகப்பன் (அ) தகப்பன் ஸ்தானத்தில் உள்ளவர்கள், மகன் (அ) இளைய சகோதரர்களை பார்த்து சொல்லும் வசை இது. இது வெறுப்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். சாபமாக கூட இருக்கலாம். ஆனால் இது கனிப்பின் கீழ் … Continue reading
கம்ப்யூட்டர்கள் பொறமைப்பட தொடங்கியிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த செய்தி உங்களுக்கு தெரி யாமல் இருந்தாலும் பரவாயில்லை. காரணம் கம்ப்யூட்டர்கள் வெகு அண்மையில்தான் பொறாமைப்பட தொடங்கி இருக்கின்றன. பொறாமைப்படும் கம்ப்யூட்டர் பற்றி முதல் செய்தி சுவீடனிலிருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி உள்ளது. . நிச்சயம் இது வியப்பை அளிக்கும் செய்திதான். கம்ப்யூட்டர்களுக்கு சுட்டுப் போட்டாலும் சுயமாக சிந்திக்கும் திறன் வராது என்று கருதப்படுகிறது. அதனையும் மீறி கம்ப்யூட்டர்களுக்கு சொற்பமாக வேனும் சிந்திக்கும் ஆற்றலை ஏற்படுத்தி தருவதற்காக … Continue reading
கூட்டு முயற்சியின் அருமையையும், அதற்கான எளிய வழிகளையும் இன்டர்நெட்டின் சமீபத்திய போக்குகள் எளிதாக உணர்த்தி வருகின்றன. தனி மனிதர்களாக செய்ய இயலாமல் போகும் காரியங்களை பலர் கூடி எளிதாக செய்து முடித்து விடலாம். இது எல்லோருக்கும் தெரிந்த தத்துவம் என்றாலும், பல நேரங்களில் பலரை திரட்டுவதே திண்டாட்டமாக போய்விடுகிறது. ஆனால் இன்டர்நெட் பகிர்தலையும், இணைந்து செயலாற்றுவதையும் சுலபமாக்கியிருக்கிறது. இதற்கு எண்ணற்ற உதாரணங்களை சொல்லலாம். அவற்றில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றை இங்கே பார்க்கலாம். . புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கும் … Continue reading