கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிற்கு தயாரா?

கிறிஸ்துமசுக்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே இருக்கிறது என்னும் வாசகத்தோடு வரவேற்கிறது ஸ்பிரிலை இணையதள‌ம்.இன்று இந்த இணைப்பை பார்த்து விட்டு நாளை அந்த தள‌த்திற்கு சென்றீர்கள் என்றால் இன்னும் 29 நாட்களே உள்ளன என்று எச்சரிகப்படலாம்.

எதற்கு இந்த எச்சரிக்கை தெரியுமா?கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்வதற்கான நினைவூட்டல் தான்.

எங்கேயும் எப்போதும் ஷாப்பிங் செய்யலாம் என்றாலும் கிறிஸ்துமஸ் போன்ற பன்டிகை காலங்கள் கட்டாய ஷாப்பிங்கிற்கானது என கொள்ளலாம்.கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிறகாக கடை கடையாக ஏறி இறங்கலாம்.அல்லது ஆன்லைனில் வலைவீசி தேவையான் பொருட்களை வாங்கலாம்.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வ‌து சுல‌ப‌மான‌து என்றாலும் க‌டை க‌டையாக‌ ஏறி இற‌ங்கும் போது ந‌ண்ப‌ர்க‌ளோடு சேர்ந்து செல்ல‌லாம்.இப்ப்டி கூட்டாக‌ ஷாப்பிங் செய்வ‌தே ஒரு இனிமையான‌ அனுப‌வ‌ம்.ஆனால் ஆன்லைனில் கிட்ட‌த்த‌ட்ட‌ த‌னிமை ஷாப்பிங் தான்.

இதைதான் மாற்றிக்காட்டுகிற‌து ஸ்பிரிலை .இந்த‌ தளத்தில் நீங்க‌ள் நண்ப‌ர்க‌ளோடும் தெரிந்த‌வ‌ர்க‌ளோடும் கூட்டாக‌ ஆன்லைன் ஷாப்பிங் செய்ய‌லாம்.அதாவ‌து நீங்கள் எந்த‌ த‌ள‌த்தில் பொருட்க‌ளை வாங்க‌ விரும்புகிறிர்க‌ளோ அந்த‌ த‌ள‌த்திற்கு உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளையும் அழைக்க‌லாம்.

டிவிட்ட‌ர்,ஃபேஸ்புக் மூல‌ம் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு அழைப்பு விடுக்க‌லாம்.அழைப்பு விடுப்ப‌து மிக‌வும் சுல‌ப‌ம்.ஸ்பிரிலை இணைப்பை கிளிக் செய்து விட்டால் போதும் ப‌க்க‌த்தில் தோன்றும் பெட்டியில் ந‌ண்ப‌ர்க‌ளை அழைத்து ,தொட‌ர்ந்து உரையாட‌லாம்.பேசிய‌ப‌டியே ஷாப்பிங் செய்வ‌து போல‌ ஆன்லைனில் பேசிய‌ப‌டியே பொருட்க‌லை வாங்க‌லாம். ப‌ரிந்துரை செய்ய‌லாம்.அலோச‌னை கேட்க‌லாம்.

இதே போல் உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் யாராவ‌து ஆன்லைனில் இருந்தால் உங்களுக்கு அழைப்பு வ‌ரும்.உதார‌ண‌மாக‌ உங்க‌ள் ந‌ண்ப‌ர் யாராவ‌து அமேசானில் அச‌த்தாலான் விலையில் புதிய‌ புத்த‌க‌த்தை பார்த்துவிட்டு உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்க‌லாம்.அல்ல‌து சூப்ப‌ர் ச‌லிகை விலையில் செல்போனை பார்த்துவிட்டு அழைக்க‌லாம்.

இப்ப‌டி எண்ண‌ற்ற‌ வித‌ங்க‌ளில் இந்த‌ த‌ள‌ம் ப‌ய‌ன்ப‌ட‌லாம்.

இந்த‌ செவையை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தும் மிக‌வும் எளிது. எத‌னையும் ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டாம். ஒரே ஒரு கிளிக் செய்து கூட்டாக‌ ஷாப்பிங்கை துவ‌க்க‌லாம்.

—–

link;
http://spree.ly/

இரண்டாம் ஆண்டில் என் வலைப்ப‌திவு

இந்த வலைப்பதிவு துவங்கி ஒராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.இது மைல்கல்லோ சாதனையோ அல்ல என்றாலும் முதலாண்டில் இந்த வலைப்பதிவை வாசித்து ஆதரவளித்த இணையவாசிகளுக்கு ந‌ன்றி தெரிவித்து கொள்வதற்காக எழுதப்படும் பதிவு இது.

முதலாண்டில் நிறைவான அனுபவமே ஏற்பட்டுள்ளது.பல தொடர் வாசகர்கள் கிடைத்திருப்பதாக நம்புகிறேன்.நல்ல பதிவுகளை பலர் மன‌ம் திறந்து பாராட்டியதோடு பின்னுட்டங்கள் வழியே ஊக்குவித்துள்ளனர்.சிலர் உரிமையோடு தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.எல்லோருக்கும் ந‌ன்றி.

தொழில்நுட்பம் மீதான எனது ஈடுபாடும் தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த முடியும் என்னும் ந‌ம்பிக்கையுமே இந்த‌ ப‌திவின் பின்னே உள்ள‌ ஆதார‌ நோக்க‌ம்.இண்டெர்நெட் அதுவே ஒரு தொழில்நுட்ப‌மாக‌ இருப்ப‌தோடு ம‌ற்ற‌ தொழில்நுட்ப‌ங்க‌ளை அடைவ‌த‌ற்கான‌ எளிய‌ வ‌ழியாக‌வும் இருக்கிற‌து.

இத‌ற்கு முன்ன‌ர் அறிமுக‌மான‌ எந்த‌ தொழில்நுட்ப‌த்தையும் விட‌ இண்டெர்நெட் முழு அள‌வில் ஜ‌ன‌நாய‌க‌ம‌ய‌மான‌து என்று சொல்லப்படுவ‌தில் என‌க்கு முழு ந‌ம்பிக்கை இருக்கிற‌து.

இண்டெர்நெட் த‌க‌வ‌ல்க‌ளை பெறுவ‌தை சுல‌ப‌மாக்கியிருப்ப‌தோடு புதிய‌ ஆயுத‌ங்க‌ளையும்,தீர்வுக‌ளையும் நம‌க்கு அளித்திருக்கிற‌து.இண்டெர்நெட்டை ச‌முக‌ நோக்கோடு ப‌ய‌ன்ப‌டுத்த‌ முடியும் . மாற்ற‌த்திற்கும் போராட்ட‌த்திற்கும் இண்டெர்நெட்டை கையில் எடுக்க‌ முடியும்.

இண்டெர்நெட் ம‌ட்டுமே எழைக‌ளும் அணுக‌க்கூடிய‌ தொழில்நுட்ப‌மாக‌ இருக்கிற‌து. எழைக‌ளிட‌ம் இண்டெர்நெட்டை கொண்டு செல்ல‌க்கூடிய‌ முய‌ற்சிக‌ளும் முன்னோடிக‌ளால் தீவிர‌மாக‌ மேற்கொள்ள‌ப்பட்டு வ‌ருகிற‌து.

இண்டெர்நெட் சார்ந்த‌ முன்னோடி முய‌ற்சிக‌ள் ம‌ற்றும் இண்டெர்நெட் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ரும் வித‌ங்க‌ளை ப‌திவு செய்வ‌து என்னுடைய‌ அடிப்ப‌டை நோக்க‌ங்க‌ளில் ஒன்று. அதே நேர‌த்தில் இண்டெர்நெட் உல‌கின் போக்குக‌ள் ம‌ற்றும் புதிய‌ த‌க‌வ‌ல்க‌ளையும் ப‌திவு செய்ய‌ முய‌ல்கிறேன்.

அது ம‌ட்டும‌ல்ல‌ இண்டெர்நெட்டை எதிர்ம‌றையாக‌ அறிமுக‌ம் செய்திக‌ளை த‌விர்த்து வ‌ந்திருக்கிறேன்.இய‌ன‌ற‌வ‌ரை தின‌ம் ஒரு ப‌திவு என்னும் ந‌டைமுறையை பின்ப‌ற்றி வ‌ருகிறேன்.

இதுவ‌ரை கிடைத்துள்ள‌ ஆத‌ர‌வு ஊக்க‌ம‌ளிக்கிற‌து.இந்த‌ நிலையில் வாசக‌ர்க‌ளிட‌ம்/ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளிட‌ம் ஒரு வேண்டுகோள். இந்த ப‌திவின் த‌ன்மை குறித்து உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை தெரிவித்தால் மேலும் மேம்ப‌டுத்திக்கொள்ள‌ உத‌வியாக‌ இருக்கும்.

இந்த‌ ப‌திவிற்கு இணைப்பு கொடுத்துள்ள‌வ‌ர்க‌ளுக்கு நெஞ்சார்ந்த‌ ந‌ன்றி.திர‌ட்டிக‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி.

டிவிட்டரில் அதிரடி மாற்றம்

டிவிட்டர் தனது கேள்வியை மாற்றிக்கொண்டிருக்கிறது.ஆனால் அதற்காக டிவிட்டரை பய‌ன்படுத்துபவர்கள் மாறவேண்டியதில்லை.சொல்லப்போனால் டிவிட்டர் பயனாளிகள் அதனை பயன்ப‌டுத்தும் விதத்தை வைத்தே டிவிட்டர் தனது கேள்வியை மாற்றியிருக்கிறது.

நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

இது தான் டிவிட்டர் இது வரை கேட்டு வந்த கேள்வி.இதற்கு பதில் அளிக்கும் வகையில் தான் டிவிட்டர் சேவையை எல்லோரும் பயன்படுத்தி வந்தனர்.அதாவது ஆரம்பத்தில்.

இப்போது டிவிட்டரின் போக்கே மாறிவிட்டது.டிவிட்டரை பயன்படுத்தும் விதமும் மாறியிருக்கிறது.துவக்கத்தில் கூறப்பட்டது போல ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பகிர்ந்து கொள்ள மட்டும் அல்லாமல் என்ன‌ நினைக்கிறார், எதை ப‌டித்துக்கொண்டிருக்கிறார்,என‌ எல்லா வ‌கையான‌ த‌கவ‌ல்க‌ளையும் ப‌கிர்வ‌த‌ற்கான‌ இட‌மாக‌ டிவிட்ட‌ர் மாறியிருக்கிற‌து.

காபி சாப்பிடுவ‌தையும் காலை உண‌வையும் ப‌கிர்ந்து கொள்ள‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌ டிவிட்ட‌ர் இன்று ஒரு ஒளிப‌ர‌ப்பு சாதனாமாக‌ உருப்பெற்றிருக்ககிற‌து.

டிவிட்ட‌ரில் புதிய‌ ப‌ட‌ங்க‌ள் ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை சுடச்சுட‌ ப‌கிர்கின்ற‌ன‌ர்.பூக‌ம்ப‌மோ புய‌ல் ம‌ழையோ முத‌ல் செய்தி அனேக‌மாக டிவிட்டரில் இருந்து பற‌க்கிற‌து.விப‌த்து என்றாலும் ச‌ம்ப‌வ‌ இட‌த்தில் இருப்ப‌வ‌ர் உட‌னே அந்த அனுப‌வ‌த்தை உட‌னே டிவிட்ட‌ர் செய்கிறார்.டிவிட்ட‌ர் மூல‌மே பேட்டி காண‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஒருவித‌த்தில் இது ந‌ல்ல‌து தான்.டிவிட்ட‌ர் மீது துவ‌க்க‌த்தில் முன்வைக்க‌ப்ப‌ட்ட‌ விம‌ர்ச‌ன‌த்திற்கும் இது ப‌திலாக‌ அமைந்துள்ள‌து.ஒருவ‌ர் என்ன் செய்து கொண்டிருக்கிறார் என்னும் கேள்விக்கான‌ ப‌திலாக‌ பகிரப்படும் விவரங்கள் பல நேரங்களில் அற்பத்தனமாக இருக்குமே அதானல் சமுகத்திற்கு என்ன பயன் என்று கேட்கப்பட்டது உண்டு.ஆனால் டிவிட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ள் இந்த‌ கேள்வி சுவ‌ரை உடைத்து எரிந்துவிட்டு டிவிட்ட‌ரை எப்ப‌டியெல்லாமோ ப‌ய‌ன்ப‌டுத்து வ‌ருகின்ற‌ன‌ர்.விளைவு டிவிட்ட‌ர் ப‌ய‌ன்பாட்டில் புதிய எல்லைக‌ள் எற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

இந்த‌ மாற்ற‌ங்க‌ளை எல்லாம் புரிந்து கொண்டு டிவிட்ட‌ர் த‌ன‌து அடிப்ப‌டை கேள்வியை மாற்றிக்கொள்வ‌தாக‌ அறிவித்துள்ள‌து.

அத‌ன் இணை நிறுவ‌ன‌ரான‌ பிஸ் ஸ்டோன் டிவிட்ட‌ர் கேள்வி இனி என்ன‌ செய்து கொண்டிருக்கிறீர்க‌ள் என்ப‌த‌ல்ல‌ அத‌ற்கு ப‌திலாக‌ என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌தே என‌ அறிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக‌ அவ‌ர் எழுதியுள்ள‌ ப‌திவில் ந‌ண்ப‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தொட‌ர்புன்கொள்ளும் எளிய‌ வ‌ழியாக‌ அறிமுக‌மான‌ டிவிட்ட‌ர் பய‌னாளிக‌ள் கைக‌ளில் புதுய‌ அவ‌தார‌ம் எடுத்து த‌னிந‌ப‌ர்க‌ளும் குழுக‌ளும் அமைப்புக‌ளும் அத‌னை முற்றிலும்க் புது வித‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்து வ‌ருவ‌தால் இந்த‌ மாற்ற‌ம் அவ‌சிய‌மாவ‌தாக‌ குறிப்பிட்டுள்ளார்.

ஆக‌ இனி டிவிட்ட‌ர் கேட்கும் கேள்வி என்ன‌ ந‌டக்கிற‌து என்ப‌தாக்வே இருக்கும்.டிவிட்ட‌ர் ப‌ய‌ன்பாட்டிற்கு மிக‌வும் பொருத்த‌மாக‌வும் இருக்கும்.

(

டிவிட்ட‌ர் ப‌ற்றிய‌ என‌து அறிமுக‌ ப‌திவையும் ப‌டித்துப்பார்க‌வும்

)
—–

link;
http://cybersimman.wordpress.com/2009/08/26/twitter-26/

வருது வருது ,ஜீ..போன் வருது

கூகுல் ஒரு பேரரசைப்போல.அதன் ஆற்றலும் பெரிது.அதன் ராஜ்ஜியமும் பரந்து விரிந்தது.அதன் வியூகமும் சக்தி வாய்ந்தது.அதன் அடுத்த கட்ட திட்டங்களும் எண்ணிலடங்காதவை.கூடவே மிக்க ரகசியமானவை.

கூகுலின் திட்ட‌ங்க‌ளில் எது வ‌த‌ந்தி எது உண்மை என்று ப‌குத்த‌றிய‌ முடியாம‌ல் இருக்கும் .இப்போதைய‌ வ‌த‌ந்தி விர‌வில் கூகுல் போன் அறிமுக‌மா இருக்கிற‌து என்ப‌து தான்.ஜி போன் என்னும் பெய‌ரில் கூகுல் தானே சொந்த‌மாக‌ செல்போனை அறிமுக‌ம் செய்ய‌ இருப்ப‌தாக‌ ஒரு பேச்சு இருந்து வ‌ருகிற‌து.

ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக‌ ஜி போன் அறிமுக‌மாக‌லாம் என்று எதிர்பார்க்கப்ப‌டுகிற‌து.கூகுல் இது ப‌ற்றி ம‌வுன‌ம் காத்தாலும் இந்த‌ செய்தி இணைய‌ உல‌கில் உலா வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் உள்ள‌து.இந்நிலையில் பிர‌ப‌ல‌ தொழில்நுட்ப‌ வ‌லைப்ப‌திவான‌ டெக்கிர‌ஞ்ச் கூகுலின் இந்த‌ திட்ட‌ம் உண்மையான‌து தான் அடுத்த‌ ஆண்டு ஜி போன் நிச்ச‌ய‌ம் வ‌ரும் அன‌ கூறியுள்ள‌து.டெக்கிர‌ஞ்ச் ந‌ம்ப‌க‌மான‌ த‌ள‌ம் என்ப‌தால‌ இத‌னை வெறும் வ‌த‌ந்தி என‌ கொள்வ‌த‌ற்கில்லை.

ஏற்க‌ன‌வே கூகுல் த‌ன‌க்கேன‌ பிர‌வுச‌ர் ஒன்றை அறிமுக‌ம் செய்ய‌ இருப்ப‌தாக‌ இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ செய்திக‌ளும் வ‌த‌ந்திக‌ளும் மாறி மாறி உலா வ‌ந்து குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்திய‌ நிலையில் இறுதியில் கூகுல் குரோம் வெளியாகி விய‌ப்பை ஏற்ப‌டுத்திய‌து.

ஜீ போன் விஷ‌ய‌த்திலும் இப்ப‌டியே நிக‌ழ‌லாம்.ஆனால் ஒன்று கூகுல் இது வ‌ரை சாப்ட்வேரைத்தாண்டி ஹார்டுவேர் ப‌க்க‌ம் வ‌ந்த‌தில்லை .என‌வே ஜி போன் சாத்திய‌மில்லை என்று ஒரு க‌ருத்து நில‌வுகிற‌து.கூகுல் தான் ஐபோன் போட்டியை ச‌மாளிக்க‌ ஸ்மார்ட் போன்க‌ளூக்கான‌ ஆப்ப‌ரேட்டிங் அமைப்பான‌ ஆன்டிராய்டை அறிமுக‌ம் செய்துள்ளதே என்று கூறுப‌வ‌ர்க‌ளும் இருக்கின்ற‌ன‌ர்.

ஆனால் கூகுல் விஷயத்தில் என்ன் வேண்டுமானாலும் நடக்கலாம்.கூகுலின் அடுத்த‌ ந‌க‌ர்வு என்ப‌து புரியாத புதிர் அல்லவா?

பறப்பதற்கு மிக்க பயம் இருந்தால்;அதற்கு ஒரு செயலி இருக்கும்

பற‌ப்பதில் உள்ள பயம்(ஃபியர் ஆப் ஃபிளையிங்) புகழ்பெற்ற பெண்ணிய எழுத்தாளர் எரிகா ஜாங்க் எழுதிய பிரசத்தி பெற்ற நாவல்.

எரிகா ஜாங்கிற்கு பறப்பதில் பயன் உண்டா என்று தெரியவைல்லை.பறப்பதில் உள்ள பயத்திற்கும் இந்த நாவலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் தெரியவில்லை.ஆனால் விமானத்தில் பறப்பவர்களில் கணிசமானோருக்கு பறப்பதில் பயமிருக்கிற‌து.

உண்மையில் பறப்பதிலான பயம் சிக்கலான உளவியல் விவகாரம் என்கின்றனர்.இந்த அச்சத்திற்கு ப‌லவித காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.விமானம் விபத்துக்குள்ளாகலாம் என்பதில் துவங்கி ,உயர்த்தினால் ஏற்படும் அச்சம் வரை எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.

30 ஆண்டுக‌ளுக்கு முன் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ஒரு ஆய்வு 18 ச‌த‌வித‌ம் பேருக்கு இந்த‌ ப‌ய‌ம் இருப்ப‌தாக‌ தெரிவித்த‌து. சில‌ ஆன்டுக‌ளுக்கு முன் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ஆய்வு அடிக்க‌டி விமான‌த்தில் ப‌ய‌னிப்ப‌வ‌ர்க‌ளிலேயே பாதி பேர் ந்தாவ‌து ஒரு ச‌ந்த‌ர்ப‌த்தில் ப‌ற‌க்கும் ப‌ய‌ம் கொண்டிருப்ப‌தாக‌ தெரிவிக்கிற‌து.

விமான‌ ப‌ய‌ண‌ம் எட்டாக்க‌னி என‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் இந்த‌ ப‌ய‌ம் குறித்து க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டிய‌தில்லை.ஆனால் தேவை க‌ருதி விமான‌ ப‌ய‌ண‌ம் மேற்கொள்ள‌ இருப்ப‌வ‌ர்க‌ள் பற‌ப்ப‌தில் உள்ள‌ அச்சத்தை நினைத்து மேலும் ப‌ய‌ப்ப‌டுவ‌து த‌விர்க்க‌ இய‌லாத‌து.

ஆனால் அவ‌ர்க‌ள் அதிக‌ம் க‌வ‌லைப்ப‌ட‌ தேவையில்லை.கார‌ண‌ம் இந்த‌ அச்ச‌த்தை போக்க‌ உத‌வும் அமைப்புக‌ளும் இணைய‌தலங்களும் இருக்கின்ற‌ன‌.இவ்வ‌ள‌வு ஏன்? இப்போது இத‌ற்கென்றே ஒரு செய‌லி உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஆப்பிளின் ஐபோனில் செய‌ல்ப‌ட‌க்கூடிய‌ செய‌லியாக‌ வ‌ர்ஜின் அட்லான்டிக் விமான‌ சேவை நிறுவ‌ன‌த்தால் இந்த‌ செய‌லி உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.வ‌ர்ஜின் ஏற்க‌ன‌வே இத‌ற்காக‌ ப‌யிற்சி வ‌குப்பு ஒன்றை ந‌ட‌த்திக்கொண்டிருக்கிற‌து.ப‌ய‌ணிகள் ம‌த்தியில் பெரும் வ‌ர‌வேற்பை பெற்றுள்ள‌ அந்த‌ ப‌ய‌ற்சி வ‌குப்பின் நீட்சியாக‌ இந்த‌ செய‌லி வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ வ‌ர்ஜின் தெர்விக்கிற‌து.

மற்ற‌ ஐபோன் செய‌லிக‌ள் போல் இத‌னை ஐபோன் அல்ல‌து இபோடு டாச்சில் ட‌வுண்லோடு செய்து ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.விமான‌த்தில் ஏறும் முன் அல்ல‌து ஏறிய‌ பின் ப‌ய‌மாக‌ இருந்தால் இந்த‌ செய‌லியை உயிர்பெற‌ச்செய்ய‌ வேண்டிய‌து தான்.அத‌ன்பிற‌கு விமான‌த்தின் உட்புற‌த்தை விவ‌ரிக்கும் வீடியோ விள‌க்க‌ம் தோன்றுவ‌தோடு ப‌ற்க்கும் ப‌ய‌ம் தொட‌ர்பான‌ வ‌ழ‌க்க‌மான‌ கேள்விக‌ளுக்கு விடை பெற‌லாம்.அதோடு ம‌ன‌தை சாந்த‌ப்ப‌டுத்திக்கொள்வ‌த‌ற்கான‌ வ‌ழிக‌ளையும் காண‌லாம்.

ஆக‌ உள்ள‌த்திலிருக்கும் அச்ச‌த்தை உள்ள‌ங்கையில் இருக்கும் சாத‌ன‌த்தை கொண்டே விர‌ட்டிவிட‌லாம்.

விர்ஜினின் அதிப‌ர் ரிச்ச்ர்டு பிராஸ்ன‌னின் அட்ட‌காச‌மான‌ அறிமுக‌ உறையோடு உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ இந்த‌ செய‌லி ஐபோனின் எல்லாம் வ‌ல்ல‌ செய‌லிக‌ளுக்கு மற்றொருஅருமையான‌ உதாரண‌ம்.

புதிய வைரஸ் நீக்கும் சேவை

கம்ப்யூட்டர் உலகம் வைரஸ் விளையாடும் பூமியாக மாறியிருக்கிறது.புதிது புதிதாக வைரஸ்கள் உருவாகி விபரீத்ததை ஏற்ப்டுத்தி வருகின்றன.இதற்கு ஈடாக வைரஸ் தடுப்பு மென்பொருள்களும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் அல்லவா?அந்த வகையில் உருவாகியிருப்பது தான் வின்மணி வைரஸ் ரீமுவர் சேவை.

தர்போது வைரஸுக்கு எதிரான மென்பொருள்கள் அநேகம் இருந்தாலும் அவை முழுமையான் தீர்வாக அமைவதில்லை என்று கூறும் வின்ம்ணி குழு அத்தகைய முழுமையான வைரஸ் நீக்க சேவையாக இதனை உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கிறது.கம்ப்யூட்டரை பாதுகாப்பதோடு பலவகையான வைரஸ்களை நீக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதன் பீட்டா வடிவம் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.

ஜிம்பாப்வே ரக்பி சங்கத்தின் ஆதரவு இதற்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த‌ வைர‌ஸ் நீக்க‌ சேவையின் பின்னெ உள்ள‌ இணைய‌தள‌ம் தேடிய‌ந்திர‌த்தில் முன்ன‌ணி பெறுவ‌த‌ற்கான‌ ம‌ற்றொரு சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.சேப்சைட் என்னும் அந்த‌ சேவை உங்க‌ள் த‌ள‌த்தை தேட‌ல் ப‌ட்டிய‌லில் முன்ன்ணிக்கு கொண்டுவ‌ர‌ உத‌வும் என்று கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.

த‌மிழ‌னின் பெருமையை உல‌க‌றிய‌ச்செய்யும் முய‌ற்சியாக‌ ந‌ன்ப‌ர்க‌ளோடு சேர்ந்து இதில் ஈடுப‌ட்டிருப்ப‌தாக‌ நாக‌ம‌ணி என்ப‌வ‌ர் தெரிவித்துள்ளார்.அவ‌ர‌து முயற்சிக்கு வாழ்த்துக்க‌ள்.

வ‌ச‌க‌ர் என்ற‌ முறையில் நாக‌ம‌ணி விடுத்த‌ வேன்டுகோளை ஏற்றும் த‌மிழ‌ர்க‌ளின் இணைய‌ முய‌ற்சி வெற்றி பெற‌ வேண்டும் என்ற‌ ஆவ‌லிலும் இந்த‌ ப‌திவை எழுதியுள்ளேன்.இணைய‌வாசிக‌ள் இந்த‌ சேவையை பயன்ப‌டுத்திப்பார்த்து பய‌னுள்ள‌து எனில் த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிந்துரைச் செய்ய‌லாம்.இந்த‌ தளத்திலும் த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளை தெரிவிக்க‌லாம்.

———-
link;
http://www.winmani.com/

140 எழுத்துகளில் சுயசரிதை

aviary_themeடிவிட்டர் செய்வதால் என்ன பயன் என்று கேட்க வேண்டிய அவசியமில்லை.டிவிட்டரில் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனரா என்று கவலைப்பட வேண்டியதில்லை.என் கடன் டிவிட் செய்வது என்பது போல டிவிட்டரில் உங்களை வெளிப்ப‌டுத்திக்கொண்டே இருக்கலாம்.

உங்களைப்பற்றி தினம் ஒரு நூறு டிவிட்டர் செய்திகளை கூட பதிவு செய்து கொண்டேயிருக்கலாம்.டிவிட்டர் இலக்கணப்படி காபி சாப்பிடுவதில் துவங்கி ,அலுவலகத்திற்கு போனது ,புதிய நாவல் படித்தது என எல்லாவற்றையும் பதிவு செய்யலாம்.

இந்த பதிவுகளை எல்லாம் அப்படியே தொகுத்து புத்தக வடிவில் சுயசரிதையாகவும் வெளியிட்டு விடலாம்.140 எழுத்துக்க‌ளாக‌ உருவான‌ குறும்ப‌திவு சுய‌ ச‌ரிதை.

சுய‌ சரிதை வெளியிடும் அள‌வுக்கு நான் என்ன‌ பெரிய‌ ஆளா என்றெல்லாம் கேட்காதீர்க‌ள்.அத‌ற்கான‌ வாய்ப்பு மிக‌வும் சுல‌ப‌மாகியிருக்கிற‌து என்ப‌தே விஷ‌ய‌ம்.’140பயோ’ என்னும் இணைய‌த‌ள‌ம் இந்த‌ சேவையை வ‌ழ‌ங்குகிற‌து.

இண்டெர்நெட் ஏற்க‌ன‌வே ப‌திப்பிக்கும் வாய்ப்பை சாம‌ன்ய‌ர்க‌ளின் கைக‌ளுக்கு கொண்டு வ‌ந்துவிட்ட‌து.வ‌லைப்ப‌திவுக‌ள் இந்த‌ சுத‌ந்திர‌த்தை மேலும் ப‌ர‌வ‌லாக்கிய‌ நிலையில் குறும் வ‌லைப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ர் புதிய‌தொரு வாயிலை திற‌ந்து விட்டுள்ள‌து.

வ‌லைப்ப‌திவு செய்வ‌த‌ற்காவ‌து கொஞ்ச‌ம் எழுத‌ தெரிய‌ வேண்டும், ஆனால் டிவிட்ட‌ரில் க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்ய‌ எந்த‌ த‌டையும் இல்லை.நினைத்ததை, ந‌ட‌ந்ததை.பார்த்ததை , படித்ததை எதையும் ப‌திவு செய்ய‌லாம்.

எல்லாவ‌ற்றையும் ப‌திவு செய்து என்ன‌ செய்ய‌ப்போகிறோம் என்று கேட்க‌கூடிய‌வ‌ர்க‌ளுக்கு ப‌தில் அளிக்கும் வ‌கையில் டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை தொகுத்து பேப்ப‌ர் பேக் புத்த‌க‌மாக‌ வெளியிடும் வ‌ச‌தியை 140ப‌யோ இணைய‌த‌ள‌ம் வ‌ழ‌ங்குவ‌தாக‌ அறிவித்துள்ள‌து.

டிவிட்ட‌ரில் நீங்க‌ள் வெளியிடும் க‌ருத்துக்க‌ள் உங்க‌ளைப்ப‌ற்றி ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்த‌க்கூடிய‌வை என்று சொல்லும் இந்த‌ த‌ள‌ம் உங்க‌ள் டீவிட்க‌ளை தொகுத்து உங்க‌ள் சுய‌ச‌ரிதையாக‌ வெளியிட்டுக்கொள்ளுங்க‌ள் என்று அழைப்பு விடுக்கிற‌து.

இத‌னை குறும் ப‌திவு சுய‌ ச‌ரிதை என‌ வ‌ர்ணிக்கும் இந்த‌ த‌ள‌ம் லேஅவுட் ம‌ற்றும் புத்த‌க‌ அட்டையை தேர்வு செய்து கொள்ளும் வ‌ச‌தியையும் த‌ருகிற‌து.இந்த‌ த‌ள‌த்தின் உத‌வியோடு 20 டால‌ரில் சுய‌ச‌ரிதையை த‌யார் செய்து விட‌லாம்.

140 எழுத்துக்க‌ளில் ப‌திவுக‌ளை வெளியிட‌ உத‌வும் டிவிட்ட‌ர் சேவையை ப‌ய‌ன்ப‌டுத்த‌ எத்த‌னையோ கார‌ண‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.அவ‌ற்றோடு இப்போது டிவுட்ட‌ர் சுய‌ச‌ரிதையும் சேர்ந்திருக்கிற‌து.
———–
link;
http://140bio.com/

இணைய செய்தி உலகை உலுக்கிய 19 வயது வாலிபர்

bnoபிரேக்கிங் நியுஸ் என்றதும் சி.என்.என், பிபிசி,நியூயார்க் டைம்ஸ் போன்ற பெரிய மீடியா நிறுவனங்களே நினைவுக்கு வரக்கூடும்.ஆனால் இணைய உலகைப்பொருத்தவரை பிரேக்கிங் நியுஸ் என்றதும் நினைவுக்கு வருபவர் மைக்கேல் வான் பாப்பல் என்னும் வாலிபர் தான்.

ஹாலந்து நாட்டைச்சேர்ந்த பாப்பலுக்கு 19 வயது தான் ஆகிறது.ஆனால் அதற்குள் இண்டெர்நெட் உலகில் முக்கிய புள்ளிகளில் ஒருவர் என்னும் அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.இணைய செய்தி உலகை தீர்மாணிக்க கூடிய செல்வாக்கு மிக்க நபர் என்றும் அடையாளம் காட்டப்படிருக்கிறார்.

பாப்பலுக்கு சொந்தமாக ஒரு செய்தி தளம் இருக்கிறது. அந்த தளம் ஒரு செய்தி நிறுவனமாக வளர்ந்திருப்பதோடு சர்வதேச செய்தி அமைப்பு ஒன்றையும் நிறுவ இருப்பதாகவும் மீடியா நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் பெருமையோடு அறிவித்துள்ளது.

செய்திக்கடலில் பெரிய திமிங்கலங்கள் எல்லாம் நீந்த முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் போது வாலிபரான பாப்பல் இணைய செய்தி உலகில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதோடு புதிய ஏஜென்சியை துவக்க இருபதாகவும் அறிவுத்துள்ளார்.

எப்படி சாத்தியமானது இந்த வளர்ச்சி.செய்தி உலகில் பாப்பல் வயதில் இருப்பவர்களை பொதுவாக குழந்தை என்றே கருத பலரும் தயாராக உள்ள நிலையில் இவர் மட்டும் எப்படி ஒரு நட்சத்திரமாக உருவானார்.

எளிமையான ஆனால் சுவாரஸ்யமான கதை அது.இண்டெர்நெட்டை புரிந்து கொண்ட ஒரு இளைஞனின் வெற்றிக்கதை .

மற்ற வாலிபர்களைப்போல பாப்பலுக்கும் இண்டெர்நெட்டில் உலா வருவது பிடித்தமான பொழுது போக்காக இருந்தது.குறிப்பாக அவருக்கு செய்திகளில் ஆர்வம் இருந்தது.இண்டெர்நெட்டில் தான் தளத்திற்கு தளம் தாவிக்கொண்டிருக்க முடியுமே.இப்படி பல செய்தி தளங்களையும் அவற்றில் அவப்போது வெளியாகும் பிரேக்கிங் செய்திகளையும் பார்த்துக்கொண்டிருந்த போது பாப்பலுக்கு ஒரு எளிமையான எண்ணம் தோன்றியது.

பலருக்கும் தோன்றக்கூடிய எண்ணம் தான்.எல்லா பிரேக்கிங் செய்திகலையும் ஒரே இடத்தில் தொகுத்து வைத்து படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்.இது தான் அந்த எண்ணம்.இப்படி ஒரே இடத்தில் உடனுக்குடன் பிரேக்கிங் செய்திகளை படிப்பதன் மூலம் புதிய பெரிய செய்திகளை அவைவெளியாகும் போதே தெரிந்துகொள்ளலாம்.இதற்காக வெவ்வேறு செய்தி தளங்களுக்கு சென்று நேரத்தை விரயமாக்க வேண்டியதில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த எண்ணம் அவருக்கு உதயமாயிற்று.ஆனால் அப்போது செய்திகளை திரட்டித்தரும் தலங்கள் இருந்தனவே தவிர பிரேக்கிங் செய்திகளுக்கான திரட்டி எதுவும் இல்லை.பாப்பல் தானே அத்தகைய சேவையை துவக்க முடிவு செய்தார்.

இப்போது பிரப்லமாக இருக்கும் டிவிட்டர் குறும்பதிவு செவையை இதற்காக பயன்படுத்திக்கொள்ள தீர்மாணித்தார்.இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் இரன்டு ஆண்டுகளுக்கு முன் டிவிட்டர் இத்தனை பிரபலமாகவில்லை என்பது தான்.

டிவிட்டர் பயன்பாடு ஒஅரவலாகாத நிலையில் அதன் அருமையை உணர்ந்திருந்த பாப்பல் டிவிட்டரில் ஒரு கனக்கு துவக்கி தான் பார்க்கும் பிரேக்கிங் செய்திகளை பகிர்ந்து கொள்ள துவங்கினார்.

ப்ரேக்கிங் நியுஸ் என்னும் டிவிட்டர் முகவரியில் அவர் செய்திகளை பகிர்ந்து கொண்டார்.புதிய பெரிய செய்திக்காக வலை வீசிக்கொண்டே இருப்பது அவை கண்ணில் பட்டவுடன் டிவிட்டரில் தெரிவிப்பது என அவர் தீவிரம் காட்டினார்.

இந்த சேவை சுவாரஸ்யமாக இருக்கவே பலரும் அவர் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர தொடங்கினர்.மற்றவர்களுக்கும் பரிந்துரைக்க துவங்கினர்.விளைவு இந்தசேவை விரைவிலேயே பிரபலமாக்த்துவங்கியது.

இந்த சேவையை எதிர்கொண்டவர்கள் அட நல்ல சேவையாக இருக்கிறதே என்று வியந்து போயினார். செய்திப்பசி கொன்டவர்கள் இந்த சேவையை பயன்படுத்தினால் போதும் என்று நினைத்தனர்.இந்த நேரத்தில் தான் ஒசாமா பின் லேடனின் வீடியோ கோப்பு ஒன்று எப்படியோ பாப்பலின் கைகளில் கிடைத்தது.மற்ற செய்தி நிறுவனங்களுக்கெல்லாம் கிடைக்காமல் தனது கைகளில் க்டைத்தாந்த வீடியோவை அவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பெரும் தொகைக்கு விற்றுவிட்டர்.

அப்பொது தான் அவருக்கு தீவிரமாக செயல்பட்டால் பெரிய நிறூவனங்களை முந்திக்கொண்டு செயல் பட முடியும் என்ற நம்பிகை ஏற்பட்டது.செய்தியை தொகுத்து தருவதே சிறந்த வழி என்ற உறுதியும் உண்டானது.

தொடர்ந்து பிரேக்கிங் செய்திகளை தொகுத்து அளித்து வந்தவருக்கு பல நாடுகளில் இருந்து வாசகர்கள் கிடைத்தனர்.இதனையடுத்து பிரேக்கிங் நியுஸான்லைன் என்னும் இணையதளத்தை ஏற்படுத்தினார்.

வரவேற்பு பிரமாதமாக் இருந்த்தை அடுத்து தனது கீழ் பணியாற்ற செய்தி ஆசிரியர்களையும் நியமித்துக்கொண்டார். இன்று முழுவீச்சிலான செய்தி தளமாக உருவாகியுள்ளது. சர்வதேச செய்தி ஏஜென்சியை துவக்கப்போவதாக அறிவிக்கும் அலவுக்கு அவர் வளர்ந்துள்ளார்.

குறிப்பிட்ட நாளில் எந்த செய்தி நிறூவனம் வேண்டுமானால் பிரேக்கிங் செய்தியை வெளியிடலாம். எந்த நிறுவனம் வேணுமானால் கோட்டை விடலாம். ஆனால் அவற்றை தொகுத்து அளிப்பதன் மூலம் பி என் ஓ மட்டும் முன்னிலைல் இருக்கும் எண்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இண்டெர்நெட் செய்தி மற்றும் நாளிதழ்களின் வருவாயை பாதித்து அவற்றின் செயல்பாட்டிற்கே வேட்டு வைத்து வருவதாக கருதப்படும் நிலையில் பாப்பல் புதிய பெரிய செய்திகளை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கி தனக்கென ஒரு செய்தி சம்பிராஜ்யத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

(

நன்றி;யூத்புல் விகடன் மின்னிதழ்)

——–

link;
http://www.bnonews.com/

கூகுல் போட்டியில் வென்ற சிறுவன்

who-is-puru-pratap-singhdoodleகூகுல் தேடியந்திரத்தில் இன்று தோன்றும் லோகோ சித்திரம் சிறப்பாக இருப்பதாக நினைத்தால் புரு பிராதாப் சிங்கிற்கு ஒரு சபாஷ் போடுங்கள்.

கூகுல் தனது லோகோவை அடிக்கடி மாற்றி அமைத்து வருகிறது.இந்த சித்திரங்கள் டூடுல் என்று அழைக்கப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன் கூகுல் லோகோ சித்திரத்திற்கான ஒரு போட்டியை அறிவித்தது.இந்த போட்டியில் பங்கேற்றவர்களில் குர்கோவன் நகரைச்சேர்ந்த புரு பிராதாப் சிங் வெற்றி பெற்றிருக்கிறார்.அவர் உருவாக்கிய சித்திரமே கூகுல் இந்திய முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த சித்திரம் முகப்பு பக்கத்தில் நாள் முழுவதும் காட்சியளிக்கும்.

புரு இந்தியாவின் தேசியப்பறவையான மயில் ,மற்றும் அம‌ர் ஜவான் ஜோதி ஆகியவற்றை கொண்டு லோகோவை வடிவமைத்துள்ளார்.கூகுலில் உள்ள ஒ என்னும் எழுத்தை நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய சாதனையாக வரைந்துள்ளார்.

நமது காலாச்சாரம் மற்றும் சாதனைகளை பிரதிபலிக்கும் இந்த லோகோ பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்படுள்ளது பொருத்தமானது தான்.

பல்வேறு மதங்களின் சங்கமமாக இருப்பதே இந்த தேசத்தின் சிறப்பமசம் என்று அவர் பெருமிதத்தோடு கூறிப்பிட்டுள்ளதும் பாரட்டத்தக்கது.

நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்

செல்போன் விற்பனையில் அகில உலக அளவில் முன்னணியில் இருக்குக் நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி லாபம் ஈட்டுவதில் முதலிடம் பெற்றுள்ளது ஆப்பிள்.எல்லாம் ஐபோன் செய்யும் மாய‌ம்.

செல்போன் சந்தையில் நோக்கியைவை எட்டிப்பிபடிக்க முடியாமல் மற்ற முன்னணி நிறுவனங்கள் திணறிக்கொன்டிருக்க ஐபோன் மூலம் இந்த சந்தையில் நுழைந்த ஆப்பிள் மட்டும் நோக்கியாவுக்கு ஈடு கொடுத்து நிற்கிறது.வெகுஜன மாடல்களின் சந்தையில் வேண்டுமானால் நோக்கியா முடிசூடா மன்னனாக இருக்கலாம் ஆனால் விலை உயர்ந்த பிரிவில் அறிமுகமான ஐபோன் ஸ்மார்ட்போன் என்று வர்ணிக்கப்படும் இந்த பிரிவில் தனிக்காட்டு ராஜாவாக விளங்குகிறது.

நோக்கியாவின் என் 90 இந்த பிரிவில் அறிமுக‌மானாலும் ஐபோன் பக்க‌த்தில் கூட‌ நெருங்க‌ முடிய‌வில்லை.இருப்பினும் ஒட்டுமொத்த‌ ச‌ந்தையில் நோக்கியாவே முன்ன‌ணியில் இருக்கிற‌து. வ‌ருவாய் ம‌ற்றும் லாப‌த்தைலும் இதே நிலை தான்.

ஆனால் த‌ற்போது முத‌ல்முறையாக‌ ஆப்பிள் நோக்கிய‌வைவிட‌ அதிக‌ லாப‌ம் ஈட்டியிருக்கிற‌தாம்.இந்த‌ ஆண்டின் ச‌மீப‌த்திய‌ காலாண்டு முடிவுக‌ளின் ப‌டி நோக்கியா 1.1 பில்லிய‌ன் டால‌ர் லாப‌ம் ஈட்ட ஆப்பிள் 1.6 பில்லிய‌ன் டால‌ர் லாபம் ஈட்டியுள்ள‌து.