சூறாவளிக்கு பின் இணையத்தில் துளிர்த்த மனிதநேயம்.


‘ஏர்பிஎன்பி’ இணைய உலகின் நவீன வெற்றிக்கதைகளில் ஒன்று.இணையவாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள கூடுதல் இடத்தை மற்றவர்களுக்கு இணையம் மூலம் தங்கி கொள்ள தற்காலிகமாக வாடகைக்கு விட வழி செய்யும் தளம் இது.அதே போல இணையவாசிகள் ஓட்டல் விடுதி போன்றவற்றில் தங்குவதற்கு பதிலாக இந்த தளத்தின் மூலம் உறுப்பினர்களின் வீடுகளில் தங்கி கொள்ளலாம்.

தற்காலத்தில் பயணங்களின் போது தங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் வித்ததையே மாற்றியமைத்து இருப்பதாக கருதப்படும் ஏர்பிஎன்பி இணையதளம் அறிமுகமில்லாதவர்களை வீடுகளில் தங்க வைப்பது பாதுக்கப்பானது தானா என்னும் கேள்வியை மீறி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

இணைய உலகில் இதன் தாக்கமும் வீச்சும் பற்றி நிறையவே அலசி ஆராயலாம்.

புறக்கணிக்க முடியாத இணைய சக்தியாக உருவெடுத்துள்ள இந்த தளம் அமெருக்காவை உலுக்கிய சாண்டி சூறாவளி தாக்குதலுக்கு பின் மனிதநேயத்தை துளிர்க்க வைத்து மனதார பாராட்டுக்க்களையும பெற்றிருக்கிறது.

சூப்பர் புயல் என்று வர்ணிக்கப்பட்ட சாண்டி புயல் நியூயார்க்,நியூஜெஸ்ஸி உள்ளிட்ட நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி ஓய்ந்தது.இதன் கோரத்தாண்டவத்தின் போது நகரமே வெள்ளத்தில் மிதந்ததோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

புயலின் தீவிரம் ஓய்ந்த பிறகும் பாதிப்பு குறைந்து விடவில்லை.வெள்ளம் சூழந்த பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

இப்படி வீடில்லாமல் தவிப்பவர்களுக்கு தங்குவதற்கான கூறையை ஏற்படுத்தி தரும் முயற்சியில் தான் ஏர்பிஎன்பி தளம் ஈடுபட்டுள்ளது.

கூடுதலாக உள்ள அறைகளை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பவர்களோடு தங்குவதற்காக இடம் தேடுபவர்களை இணைத்து வைப்பது போல சூறாவளியால் வீடிழந்து தவிப்பவர்களுக்கு தங்களிடம் கூடுதலாக உள்ள அறையை அளிக்க முன்வருபவர்களை இணைத்து வைப்பதன் மூலம் காலத்தின் செய்த உதவியை அளித்து வருகிறது இந்த தளம் .

வழக்கமாக அறைகளுக்கு என்று குறிப்பிட்ட கட்டணம் வாடகையாக வசூலிக்கப்படும் .ஆனால் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாடகை இல்லாமல் இலவசமாக அறைகள் அளிக்கப்படுகிறது.

நியூயார்க் பகுதியில் உள்ள தளத்தின் உறுப்பினர்கள் தங்களிடம் உள்ள கூடுதல் அறையை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச‌மாக வழங்க முன வந்து அதனை பட்டியலிடலாம்.தற்காலிக தங்குமிடத்தை தேடி கொண்டிருப்பவர்கள் இவற்றில் இருந்து தங்களுக்கான இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.அவர்களும் தங்களுக்கு இடம் தேவை என்னும் கோரிக்கையை பட்டியலிடலாம்.

பேரிடர் காலங்களில் அரசாங்கம் வழங்கும் உதவிகள் மட்டும் நிச்சயம் போதாது.மனிதருக்கு மனிதர் பரஸ்பரம் செய்யும் உதவிகளே நிலைமையை சமாளிக்க பேருதவியாக அமையும்.

அதிலும் இணைய உலகில் இணையதங்கள பரஸ்பர உதவிக்கான புதிய வாயில்களை அகல திறக்கும் ஆற்றல் படைத்தாதாக இருக்கின்றன.

அந்த வகையில் ஏர்பினெபி தளம் சாண்டி சூறாவளியால் வீடிழ்ந்தவர்களுக்கு நியூயார்க் நகரவாசிகள் தங்கள் வீடுகளின் கதவை அகல திறந்து விட வழி செய்து மகத்தான உதவி செய்து வருகிறது.

பகிர்ந்து கொள்வோம்,நல்லது செய்வோம் என அழைப்பு விடுக்கும் இந்த தளம் இது வரை 400 க்கும் மேற்ப்படவ்ர்களுக்கு இலவச தங்குமிடம் பெற்றுதந்த்துள்ளது.

ஆபத்து காலத்தில் கைகொடுக்க கூடிய ஆற்றல் தொழில்நுட்பத்திற்கு இருப்பதை உணர்த்தும் மற்றொரு அழகான உதாரணம் இது.

இணையதள முகவரி;https://www.airbnb.com/sandy

2 responses to “சூறாவளிக்கு பின் இணையத்தில் துளிர்த்த மனிதநேயம்.

  1. அந்த தளத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுகள்…….

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  2. பிங்குபாக்: புயலுக்கு பின் ஒரு இணையதளம். | Cybersimman's Blog·

பின்னூட்டமொன்றை இடுக